முகப்பு


  • ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!



    ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
    Let's Spread Aathisoodi to the World!

    1. அறம் செய விரும்பு / 
    1. Learn to love virtue.

    2. ஆறுவது சினம் / 
    2. Control anger.

    3. இயல்வது கரவேல் / 
    3. Don't forget Charity.

    4. ஈவது விலக்கேல் / 
    4. Don't prevent philanthropy.

    5. உடையது விளம்பேல் / 
    5. Don't betray confidence.

    6. ஊக்கமது கைவிடேல் / 
    6. Don't forsake motivation.

    7. எண் எழுத்து இகழேல் / 
    7. Don't despise learning.

    8. ஏற்பது இகழ்ச்சி / 
    8. Don't freeload.

    9. ஐயம் இட்டு உண் / 
    9. Feed the hungry and then feast.

    10. ஒப்புரவு ஒழுகு / 
    10. Emulate the great.

    11. ஓதுவது ஒழியேல் / 
    11. Discern the good and learn.

    12. ஒளவியம் பேசேல் / 
    12. Speak no envy.

    13. அகம் சுருக்கேல் / 
    13. Don't shortchange.

    14. கண்டொன்று சொல்லேல்/ 
    14. Don't flip-flop.

    15. ஙப் போல் வளை / 
    15. Bend to befriend.

    16. சனி நீராடு / 
    16. Shower regularly.

    17. ஞயம்பட உரை / 
    17. Sweeten your speech.

    18. இடம்பட வீடு எடேல் / 
    18. Judiciously space your home.

    19. இணக்கம் அறிந்து இணங்கு / 
    19. Befriend the best.

    20. தந்தை தாய்ப் பேண் / 
    20. Protect your parents.

    21. நன்றி மறவேல் / 
    21. Don't forget gratitude.

    22. பருவத்தே பயிர் செய் / 
    22. Husbandry has its season.

    23. மண் பறித்து உண்ணேல் / 
    23. Don't land-grab.

    24. இயல்பு அலாதன செய்யேல் / 
    24. Desist demeaning deeds.

    25. அரவம் ஆட்டேல் / 
    25. Don't play with snakes.

    26. இலவம் பஞ்சில் துயில் / 
    26. Cotton bed better for comfort.

    27. வஞ்சகம் பேசேல் / 
    27. Don't sugar-coat words.

    28. அழகு அலாதன செய்யேல் / 
    28. Detest the disorderly.

    29. இளமையில் கல் / 
    29. Learn when young.

    30. அரனை மறவேல் / 
    30. Cherish charity.

    31. அனந்தல் ஆடேல் / 
    31. Over sleeping is obnoxious.

    32. கடிவது மற / 
    32. Constant anger is corrosive.

    33. காப்பது விரதம் / 
    33. Saving lives superior to fasting.

    34. கிழமைப்பட வாழ் / 
    34. Make wealth beneficial.

    35. கீழ்மை அகற்று / 
    35. Distance from the wicked.

    36. குணமது கைவிடேல் / 
    36. Keep all that are useful.

    37. கூடிப் பிரியேல் / 
    37. Don't forsake friends.

    38. கெடுப்பது ஒழி / 
    38. Abandon animosity.

    39. கேள்வி முயல் / 
    39. Learn from the learned.

    40. கைவினை கரவேல் / 
    40. Don't hide knowledge.

    41. கொள்ளை விரும்பேல் / 
    41. Don't swindle.

    42. கோதாட்டு ஒழி / 
    42. Ban all illegal games.

    43. கெளவை அகற்று / 
    43. Don't vilify.

    44. சக்கர நெறி நில் / 
    44. Honor your Lands Constitution.

    45. சான்றோர் இனத்து இரு / 
    45. Associate with the noble.

    46. சித்திரம் பேசேல் / 
    46. Stop being paradoxical.

    47. சீர்மை மறவேல் / 
    47. Remember to be righteous.

    48. சுளிக்கச் சொல்லேல் / 
    48. Don't hurt others feelings.

    49. சூது விரும்பேல் / 
    49. Don't gamble.

    50. செய்வன திருந்தச் செய் / 
    50. Action with perfection.

    51. சேரிடம் அறிந்து சேர் / 
    51. Seek out good friends.

    52. சையெனத் திரியேல் / 
    52. Avoid being insulted.

    53. சொற் சோர்வு படேல் / 
    53. Don't show fatigue in conversation.

    54. சோம்பித் திரியேல் / 
    54. Don't be a lazybones.

    55. தக்கோன் எனத் திரி / 
    55. Be trustworthy.

    56. தானமது விரும்பு / 
    56. Be kind to the unfortunate.

    57. திருமாலுக்கு அடிமை செய் / 
    57. Serve the protector.

    58. தீவினை அகற்று / 
    58. Don't sin.

    59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 
    59. Don't attract suffering.

    60. தூக்கி வினை செய் / 
    60. Deliberate every action.

    61. தெய்வம் இகழேல் / 
    61. Don't defame the divine.

    62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 
    62. Live in unison with your countrymen.

    63. தையல் சொல் கேளேல் / 
    63. Don't listen to the designing.

    64. தொன்மை மறவேல் / 
    64. Don't forget your past glory.

    65. தோற்பன தொடரேல் / 
    65. Don't compete if sure of defeat.

    66. நன்மை கடைப்பிடி / 
    66. Adhere to the beneficial.

    67. நாடு ஒப்பன செய் / 
    67. Do nationally agreeables.

    68. நிலையில் பிரியேல் / 
    68. Don't depart from good standing.

    69. நீர் விளையாடேல் / 
    69. Don't jump into a watery grave.

    70. நுண்மை நுகரேல் / 
    70. Don't over snack.

    71. நூல் பல கல் / 
    71. Read variety of materials.

    72. நெற்பயிர் விளைவு செய் / 
    72. Grow your own staple.

    73. நேர்பட ஒழுகு / 
    73. Exhibit good manners always.

    74. நைவினை நணுகேல் / 
    74. Don't involve in destruction.

    75. நொய்ய உரையேல் / 
    75. Don't dabble in sleaze.

    76. நோய்க்கு இடம் கொடேல் / 
    76. Avoid unhealthy lifestyle.

    77. பழிப்பன பகரேல் / 
    77. Speak no vulgarity.

    78. பாம்பொடு பழகேல் / 
    78. Keep away from the vicious.

    79. பிழைபடச் சொல்லேல் / 
    79. Watch out for self incrimination.

    80. பீடு பெற நில் / 
    80. Follow path of honor.

    81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 
    81. Protectyour benefactor.

    82. பூமி திருத்தி உண் / 
    82. Cultivate the land and feed.

    83. பெரியாரைத் துணைக் கொள் / 
    83. Seek help from the old and wise.

    84. பேதைமை அகற்று / 
    84. Eradicate ignorance.

    85. பையலோடு இணங்கேல் / 
    85. Don't comply with idiots.

    86. பொருள்தனைப் போற்றி வாழ் / 
    86. Protect and enhance your wealth.

    87. போர்த் தொழில் புரியேல் / 
    87. Don't encourage war.

    88. மனம் தடுமாறேல் / 
    88. Don't vacillate.

    89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 
    89. Don't accommodate your enemy.

    90. மிகைபடச் சொல்லேல் / 
    90. Don't over dramatize.

    91. மீதூண் விரும்பேல் / 
    91. Don't be a glutton.

    92. முனைமுகத்து நில்லேல் / 
    92. Don't join an unjust fight.

    93. மூர்க்கரோடு இணங்கேல் / 
    93. Don't agree with the stubborn.

    94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 
    94. Stick with your exemplary wife.

    95. மேன்மக்கள் சொல் கேள் / 
    95. Listen to men of quality.

    96. மை விழியார் மனை அகல் / 
    96. Dissociate from the jealous.

    97. மொழிவது அற மொழி / 
    97. Speak with clarity.

    98. மோகத்தை முனி / 
    98. Hate any desire for lust.

    99. வல்லமை பேசேல் / 
    99. Don't self praise.

    100. வாது முற்கூறேல் / 
    100. Don't gossip or spread rumor.

    101. வித்தை விரும்பு / 
    101. Long to learn.

    102. வீடு பெற நில் / 
    102. Work for a peaceful life.

    103. உத்தமனாய் இரு / 
    103. Lead exemplary life.

    104. ஊருடன் கூடி வாழ் / 
    104. Live amicably.

    105. வெட்டெனப் பேசேல் / 
    105. Don't be harsh with words and deeds.

    106. வேண்டி வினை செயேல்/ 
    106. Don't premeditate harm.

    107. வைகறைத் துயில் எழு / 
    107. Be an early-riser.

    108. ஒன்னாரைத் தேறேல் / 
    108. Never join your enemy.

    109. ஓரம் சொல்லேல் / 
    109. Be impartial in judgement.

    - ஔவையார் / Avvaiyaar.


    Posted 24 Jul 2015, 07:41 by Mohankumar Gopalsamy
  • எப்படி பேச வேண்டும்

    Posted 1 Jun 2014, 08:55 by Mohankumar Gopalsamy
  • நவரசம்
    நவரசம் - ஒன்பது வெளிப்பாடுகள்
    1)Anger - கோவம்
    2)Disgust - வெறுப்பு
    3)Valour - வீரம்
    4)Laughter - சிரிப்பு
    5)Delight - மகிழ்ச்சி
    6)Sorrow - இரக்கம்
    7)Fear - பயம்
    8)Wonder - ஆச்சர்யம்
    9)Peace - சாந்தி



    Posted 31 May 2014, 19:32 by Mohankumar Gopalsamy
Showing posts 1 - 3 of 3. View more »

  • கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..

    கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..

    1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

    2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

    ...

    3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

    4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

    5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

    6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

    7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

    8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

    9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

    10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.....

    Posted 22 Nov 2014, 16:12 by Mohankumar Gopalsamy
  • மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி...........!

    மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி...........!

    உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

    நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

    ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!

    உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!

    இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.......!

    தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.......!

    . ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.......!

    . நெல்லிச்சாறுடன்பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.......!

    . ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.......!

    . அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும்,நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு.......!

    நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும்இருக்க உதவும்.......!

    .நெல்லிக்காயின்சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும்.......!

    மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.......!

    இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்......!

    உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

    நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!!

    Posted 24 Oct 2014, 00:19 by Mohankumar Gopalsamy
  • ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...
    Agriculture விவசாயம்-ன் படம்.
    Agriculture விவசாயம்-ன் படம்.
    Agriculture விவசாயம்-ன் படம்.
    Agriculture விவசாயம்-ன் படம்.

    ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...

    நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...

    பண்ணை விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.
    விருதுநகரில் இருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரலொட்டி கிராமத்திலிருக்கிறது தண்டபாணிக்குச் சொந்தமான 'சுமதி பழத்தோட்டம்’. நாம் அங்கே சென்றிருந்த நேரத்தில் ஆட்டுக்கு அகத்திக் கீரையைப் பறித்து கொடுத்துக் கொண்டிருந்தவர், அதைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
    ''பி.காம் வரைக்கும் படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட எங்களுக்குச் சொந்தமான காய்கறிக் கடையில வியாபாரத்தைப் பார்க்க வந்துட்டேன். பரம்பரையாவே காய்கறிக் கடைதான்கிறதால, மிச்சமாகிற காய்கறி, பழங்களை எல்லாம் வீட்டுல வளர்க்கிற ஆடு, மாடுங்களுக்குப் போடுவோம். சின்னவயசுல இருந்தே கோழி, ஆடு, மாடுங்கனா ரொம்ப இஷ்டம். அதுங்கள வளர்க்கறதுல நிறைய ஈடுபாடு காட்டுவேன். இந்த ஆர்வம்தான், இப்ப இந்த 5 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தோட ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வளர்க்கவும் வெச்சிருக்கு'' என்று பெருமையோடு சொன்ன தண்டபாணி, தொடர்ந்தார்.

    ''இந்த நிலத்துல மூணடிக்கு கீழ சுக்காம் பாறை. அதனால, 'வேற எந்தப் பயிரும் போட முடியாது’னு சொல்லிட்டாங்க. கருவேல மரங்களும், மஞ்சனத்தி மரங்களும் சூழ்ந்து கிடந்த இந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, கல், மண்ணையெல்லாம் நிரவி, 2004-ம் வருஷத்துல ஒரு ஏக்கர் அளவுல காஞ்சன் ரக நெல்லி, ஒண்ணரை ஏக்கர்ல சப்போட்டா, ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரக கொய்யா போட்டேன். 2007-ம் வருஷத்திலிருந்து கோழிப் பண்ணை இருக்கு. ஒன்பது மாசத்துக்கு முன்ன 1 ஏக்கர்ல ரெட் லேடி ரக பப்பாளி நடவு செய்தேன்.
    விருதுநகர்ல, 2013-ம் வருஷம் டிசம்பர் மாசம், 'பசுமை விகடன்’ நடத்தின வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அப்பத்தான் ஆட்டுப் பண்ணை அமைக்கணும்கிற எண்ணம் வந்துச்சு. என்னோட நண்பர் பாலமுருகன் கோயமுத்தூர்ல ஆட்டுப் பண்ணை வெச்சிருக்கார். அவரோட ஆலோசனைப்படியும், 'அம்மன் ஆட்டுப் பண்ணை' சதாசிவத்தோட வழிகாட்டுதல்படியும் ஆட்டுப் பண்ணை¬யை அமைச்சுட்டேன். 6 மாசமா ஆட்டுப் பண்ணையும் நடந்துட்டிருக்கு'' என்றபடியே நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளி சாகுபடி பற்றியும்... ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புப் பற்றியும் அழகாக அடுக்கத் தொடங்கினார். அதை, இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

    இரண்டு ஆண்டுகளில் மகசூல்!
    'நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளியை இளங்கன்றுகளாகவே நடவு செய்யலாம். இதற்கு, புரட்டாசியில் ஓர் உழவு போட்டு, 18 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். பப்பாளிக்கு 8 அடி இடைவெளியில் குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு தட்டுக்கூடை அளவு செம்மண் கொட்டி, ஒரு வாரம் வரை ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு தட்டுக்கூடை ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டுச்சாணத்தைப் போட்டு வைத்தால், ஐப்பசி மாதம் மழை பெய்யவும் சரியாக இருக்கும்.
    1 ஏக்கரில் 125 நெல்லி, ஒன்றரை ஏக்கரில் 170 சப்போட்டா, ஒரு ஏக்கரில் 125 கொய்யா, ஒரு ஏக்கரில் 1,000 பப்பாளிக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். முதல் மூன்று மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர்விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும் (இவர், கொய்யா, பப்பாளி இரண்டுக்கும் வாரம் ஒரு முறையும்; சப்போட்டாவுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும்; நெல்லிக்கு 12 நாட்களுக்கு ஒரு முறையும் வாய்க்கால் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சி வருகிறார்). மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு அரைத் தட்டுக்கூடை என்கிற அளவில், ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரத்தை இட வேண்டும்

    (இவரிடம் ஆடு, கோழிக் கழிவுகள் தாராளமாக இருப்பதால், அவற்றை குழியில் சேகரித்து தண்ணீரில் கரைத்து பாசன நீரில் கலந்து விடுகிறார்). முழு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. நெல்லி, சப்போட்டா மற்றும் கொய்யா ஆகியவை இரண்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். பப்பாளி ஒன்பது மாதங்களில் மகசூலுக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் வரை வருமானம் தரும்..
    கோழிகளில் கொட்டும் வருமானம்!
    கோழிகளுக்கு ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகிதத்தில் இடம் கொடுத்து... நாம் வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் 30 அடி நீளம், 18 அடி அகலம் அளவில் கொட்டகை அமைத்திருக்கிறோம். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவு என்பதால், 500 கோழிகளுக்கும் மேல் வளர்க்கலாம். இப்போது 250 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள் என 400 கோழிகளுடன் 15 வாத்துகள் மற்றும் 20 கின்னிக்கோழிகள் இருக்கின்றன. கோழி, வாத்து, கின்னிக்கோழிகள் ஆகியவற்றுக்கு வளர்ப்பு முறை ஓன்றுதான். இவற்றுக்கு காலை, மாலையில் பிண்ணாக்குக் கலந்த தவிட்டுக் கலவையை உணவாகக் கொடுக் கிறோம். 1 கிலோ தவிட்டுக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்கிற விகிதத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொட்டகைக்குள் ஆறு இடங்களில் வைத்து விடுவோம். முட்டைகோஸ் இலை, காலிஃபிளவர் இலை, என மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இதைத் தவிர புழு, பூச்சிகள், பல்லிகள், வண்டுகளை எல்லாம் கோழிகளே பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளும். இதனால், கொட்டகைக்குள் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கும் செலவு மிச்சம். கோழி மற்றும் வாத்து ஆகியவற்றின் எச்சங்கள்... தோட்டத்துக்கு உரம்தான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது.

    அசத்தும் ஆட்டுப் பண்ணை!
    கொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதுதான் நல்லது. கொட்டகை அமைக்கும்போது... பெரிய ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு பத்து சதுர அடி, குட்டி ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு 5 சதுர அடி என்ற அளவில் இடம் கொடுக்க வேண்டும். அதனால், நாம் வளர்க்க இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கொட்டகை இருக்க வேண்டும். நாங்கள், 80 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில், 8 அடி உயரத்தில் கொட்டில் அமைத்து பத்து பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு ஆனது.
    ஒரு பிரிவில் பெரிய ஆடு என்றால் 10 முதல் 15 ஆடுகளையும், குட்டி என்றால் 25 முதல் 30 வரையிலும் அடைக்கலாம். இப்போது தலைச்சேரி-47, ஜமுனாபாரி-20, நாட்டு ஆடுகள்-60, பீட்டல் கிடா-1, பீட்டல் ஆடு-1, கோபார் கிடா-1, சேலம் கருப்பு-20, செம்மறி-15 என மொத்தம் 165 ஆடுகள் இருக்கின்றன. ஆடுகளின் எச்சம் கீழே விழுந்துவிடுவதால், சுத்தம் செய்வது எளிது. சாதாரண முறை ஆடு வளர்ப்பு என்றால், பராமரிப்புக்குக் குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர்கள் தேவைப்படும். ஆனால், கொட்டில் முறை என்பதால், 165 ஆடுகளை ஒரே ஆள் பராமரிக்க முடியும்.

    தினமும் காலையில் பசுந்தீவனமாக அகத்தி, சோளத்தட்டை, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்கலாம் (இதற்காகவே அரை ஏக்கரில் அகத்தி போட்டிருக்கிறார் தண்டபாணி). மதியத்தில் அடர்தீவனமாக கருக்கா தவிடு, மக்காச்சோளம், சோளம், உளுந்தம்குருணை, துவரைக்குருணை, தாது உப்பு, அயோடின் உப்பு ஆகியவற்றைக் கலந்து, மெஷினில் திரித்து, ஒரு பெரியஆட்டுக்கு 300 கிராம், பெரிய குட்டிக்கு 200 கிராம், சின்ன குட்டிக்கு 150 கிராம் என்கிற அளவில் தினமும் கொடுக்கலாம்.
    கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும்போது ஆடுகளுக்கு சரியாகச் செரிமானம் ஆகாமல் கழிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, கொட்டிலுக்கு முன்பாக 100 அடி நீளம் 50 அடி அகலத்தில் வேலி அமைத்து, ஆடுகளைக் காலாற நடக்க வைக்கலாம். கொட்டிலை விட்டு இறங்கி, இந்த வேலிகளுக்குள் மட்டும் ஆடுகள் மேயும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலமாக, ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். குட்டிகள், செம்மறி ஆடுகள், சினையாடுகளை தனித்தனிக் கொட்டகையில் வளர்ப்பது நல்லது.
    முயல் பத்தி சொல்லலையா?!
    சாகுபடி மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி தண்டபாணி பேசி முடிக்க... ''முயல், புறா, மாடு பத்தியெல்லாம் சொல்லலையா..?'' என்று கேட்ட அவருடைய மனைவி சுமதி,

    ''ஒரு வருஷமா முயல் வளர்க்கிறோம். ஒரு ஜோடி முயல் 300 ரூபாயிலிருந்து விலை போகும். தனித்தனி கூண்டு வெச்சு, காலிஃபிளவர் இலை, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் இதையெல்லாம் உணவா கொடுக்கிறோம். நூத்துக்கணக்குல முயல்களை வளர்த்து வித்துட்டே இருக்கோம். இபபோதைக்கு 12 முயலுங்க இருக்கு. 80 புறாக்கள் இருக்கு. ஜோடி 160 ரூபாய் வரை விலை போகுது. ரெண்டு சிந்தி பசு வாங்கி ஒரு மாசம் ஆகுது. அடுத்ததா மாட்டுப் பண்ணை, லவ்பேர்ட்ஸ், நாய்ப் பண்ணைனு கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்'' என்று முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சொன்னார் சுமதி.
    பழ மரம்... தரும் பலன்!
    நிறைவாகப் பேசிய தண்டபாணி, ''இந்த மண் அத்தனை வளமில்லாத மண்ணா இருந்தாலும், நெல்லியைத் தவிர மத்ததெல்லாம் நல்லாவே வளர்ந்து வருது. நெல்லியில அந்த அளவுக்கு மகசூல் வரல. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ரெண்டு தடவை, அதாவது ஆறு மாசத்துக்கு ஒரு பறிப்பு. மூணு மாதம் வரை மகசூல் இருக்கும். சராசரியா தினமும் 40 கிலோ வீதம் மாசத்துக்கு 1,200 கிலோ. மூணு மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். கிலோ 25 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாய்; கொய்யா, வருஷத்துக்கு ரெண்டு தடவை பறிப்பு வரும். தினமும் 100 கிலோ வீதம், மாசத்துக்கு 3 ஆயிரம் கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால, 9 ஆயிரம் கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 30 ரூபாய் வீதம், 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்; சப்போட்டாவும் வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் கொடுக்குது. தினமும் 90 கிலோ வீதம் மாசத்துக்கு 2 ஆயிரத்து 700 கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால 8 ஆயிரத்து 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் வீதம் 1 லட்சத்தி 62 ஆயிரம் ரூபாய்; பப்பாளி தினமும் 120 கிலோ வீதம் மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா... 10 ஆயிரத்து 800 கிலோ. ஒரு கிலோ 25 ரூபாய் வீதம் 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் 7 லட்சத்தி 92 ஆயிரம் ரூபாய். இதை வருஷத்துக்கு கணக்குப் போட்டா... 15 லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் வரும். செலவைப் பொறுத்தவரை 2 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் வரும். இதைக் கழிச்சா... 13 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.

    எனக்கு விருதுநகர் மார்க்கெட்ல கடை இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை. இயற்கைப் பழங்கள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்குறதால ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. தோட்டத்துக்கே வந்தும் வாங்கிட்டு போயிடுறாங்க. அதில்லாம, எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கும் மார்க்கெட்ல கடைகள் இருக்கு. அதனால அன்னன்னிக்கு பறிக்கிறது, அன்னன்னிக்கே வித்து தீந்துடுது. இருப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. புத்தம்புது இயற்கை பழங்கள்ன்றதால விற்பனை சுலபமாயிடுது'' என்று பழ மரங்களின் வருவாய் பேசியவர், கால்நடைகளின் வருவாய் பக்கம் வந்தார்.
    ''கிரிராஜா கோழி 150 இருக்கு. இது மொத்தமுமே முட்டைக்காக மட்டும்தான் வளர்க்கிறேன். நாட்டுக் கோழிகள்ல பெரிய பெட்டைகள் 100 தவிர, மீதியிருக்கிற 150 மட்டும் வளரவளர விற்பனை செஞ்சுடுவேன். தை முதல் பங்குனி வரைக்கும் 3 மாசத்துக்கு கிடைக்கிற முட்டைகளை விற்பனை செய்யுறது கிடையாது. இந்த மாசத்துல அடைக்கு வைப்போம். ஒரு நாட்டுக்கோழி 8 முதல் 10 முட்டை வைக்கும். 100 கோழிக்கு 1,000 முட்டை. இதுல 700 முதல் 750 குஞ்சுகள் வரை பொறிக்கும். 500 முதல் 600 குஞ்சுகள் பெரிய கோழியா வளரும். எப்படியும் மொத்தம் 500 கோழிகள் விற்பனையாகிடும். கோழி ஒண்ணுக்கு 400 ரூபாய் வீதம், 500 கோழிக்கு வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் வரும். கிரிராஜா, நாட்டுக் கோழிகள் மொத்தமா சேர்த்து 400 கோழிகள் இருக்கு. இதன் மூலமா சராசரியா தினமும் 120 முட்டை கிடைச்சுடும். மாசம் 3,600 முட்டை. ஒரு முட்டை பத்து ரூபாய் வீதம் விலை போகுது. இதன்படி பார்த்தா.. 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி ஒன்பது மாசத்துக்கு முட்டை விற்பனை மூலமாவே 3 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முட்டைகளையும் என்னோட கடையில வெச்சே வித்துடறேன்.
    கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, மொத்த கோழிகளுக்கும் ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகும். 365 நாட்களுக்கு 54,750 ரூபாய் செலவு பிடிக்கும். கோழி விற்பனை, முட்டை விற்பனை மூலமா 5 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவுத் தொகையைக் கழிச்சா. 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 250 ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக, பழ மரங்கள், கோழி வளர்ப்பு மூலமாவே 18 லட்சத்துக்கு மேல லாபம் கிடைக்கும். முயல், புறா வருமானமெல்லாம் தனி. பழங்கள், கோழி, முட்டைனு எல்லாத்தையும் நான் நேரடியா விக்கிறதாலதான் இந்த விலைக்கு விற்பனை செய்ய முடியுது. இல்லாட்டி இதுல பாதி அளவு ரூபாய்க்குகூட விற்பனை செய்ய முடியாது. அந்த வகையில எனக்குக் கடை இருக்கிறது ஒரு வரப்பிரசாதம்.
    வாத்து மற்றும் கின்னிக்கோழிகளை இதுவரை விற்பனை செய்யல. அதேமாதிரி ஆடுகளையும் இன்னமும் விற்பனை செய்ய ஆரம்பிக்கல. கிடைக்கிற குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இப்போதைக்கு நாட்டு ஆடு உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்க்கும், ஜமுனாபாரி கிலோ 350 ரூபாய்க்கும், தலைச்சேரி கிலோ 300 ரூபாய்க்கும் விலை போயிட்டிருக்கு. செம்மறி ஆடுகளை உருப்படிக் கணக்குலதான் வாங்குவாங்க. இன்னும் ஆறு மாசத்துல ஆடுகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சுடுவேன். எப்படி பார்த்தாலும் செலவெல்லாம் போக ஆடுகள் மூலம் மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்ற தண்டபாணி,
    ''இப்பவெல்லாம் கடும் வறட்சி ஆட்டிப்படைக்குது. 500 அடிக்கு மேல போர் போட்டாகூட தண்ணி வரமாட்டேங்குது. இதனால காய்கறி, பூ இதையெல்லாம் சாகுபடி செய்றது சாத்தியமில்லாம இருக்கு. இதுங்கள காட்டிலும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புல காசு கொட்டுது. இதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு செய்தா... லாபம் நிச்சயம்'' என்று நம்பிக்கைப் பகிர்ந்தார்.
    தொடர்புக்கு, தண்டபாணி, 
    செல்போன்: 93674-11815

    Posted 22 Oct 2014, 20:28 by Mohankumar Gopalsamy
  • வாழையிலை..!

    வாழையிலை..!

    1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

    2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

    3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

    4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

    5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

    6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

    7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

    தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். . இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

    நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

    வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

    Posted 2 Oct 2014, 09:24 by Mohankumar Gopalsamy
  • வீட்டுக்கு ஒரு வேம்பு...

    வீட்டுக்கு ஒரு வேம்பு

    அருகிலேயே இருப்பதாலும் அதிகமாக கிடைப்பதாலும் இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை!

    வீட்டுக்கு ஒரு வேம்பு வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது !!!

    வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica).
    அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்

    'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
    .
    'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

    இலை:

    வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.
    வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

    வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

    பூ:

    வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
    காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
    விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.
    வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

    பட்டை:

    வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

    பிசின்:

    உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

    புண்ணாக்கு:

    வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

    வீட்டுக்கு ஒரு வேம்பு  அருகிலேயே இருப்பதாலும் அதிகமாக கிடைப்பதாலும் இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை!  வீட்டுக்கு ஒரு வேம்பு வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது !!!  வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்  'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும். . 'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.  இலை:  வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம். வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.  வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.  பூ:  வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும். காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது. விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும். வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.  பட்டை:  வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.  பிசின்:  உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.  புண்ணாக்கு:  வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

    Posted 2 Oct 2014, 09:20 by Mohankumar Gopalsamy
Showing posts 1 - 5 of 8. View more »


  • இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறை
    குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.

    எனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம்.

    இதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

    இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருத்தல் அவசியம். இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும்.
    Posted 31 May 2014, 19:09 by Mohankumar Gopalsamy
  • காரில் ஆயில் மாற்றுவதற்கான எளிய வழிகாட்டு முறை
    கார் எஞ்சின் சூடாவதற்கும், ஸ்மூத்தாக இயங்காததற்கும் எஞ்சினில் இருக்கும் ஆயில் அளவு மற்றும் தரம் மிக முக்கிய காரணமாகிறது. எனவே, கார் நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிலை சரியான இடைவேளிகளில் மாற்றுவது மிக அவசியம்.

    காரில் ஆயில் மாற்றுவதற்காக மெக்கானிக் ஷாப் அல்லது சர்வீஸ் சென்டருக்கு சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும் என்பதால், சிலர் இதில் அலட்சியம் காட்டுவது இயல்பு. ஆனால், கார் மக்கர் பண்ணாமல் செல்வதற்கு எஞ்சின் ஆயில் முக்கியமானது.

    காரில் ஆயில் மாற்றுவது மிக எளிமையான காரியமே. ஆனால், சிறிது முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். முதலில் எஞ்சினை ஸ்டார்ட் செய்து எஞ்சினை 10 நிமிடங்கள் ஓடவிடவும். இதனால், எஞ்சின் சூடாகி அதில் இருக்கும் ஆயில் சூடேறி இளகிவிடும்.

    இதன்மூலம், எஞ்சினுள்ள பழைய ஆயில் முழுவதும் எளிதாகவும், சீக்கிரத்திலும் வெளியேற்றிவிடலாம். பிறகு எஞ்சினை ஆப் செய்து விட்டு ஆக்ஸில் ஸ்டான்டில் வைத்து காரை நிறுத்துங்கள். காருக்கு கீழே சென்று எஞ்சினுக்கு கீழ் இருக்கும் ஆயில் வெளியேற்றுவதற்கான துவாரத்தில் இருக்கும் நட்டை கழற்றிவிடுங்கள்.

    ஆயில் ஃபில்டரையும் ரிமூவர் மூலம் அகற்றுங்கள். ஆயில் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்த பின் ட்ரைன் நட்டில் புதிய கேஸிங் ஒன்றை போட்டு ஆயில் கசியாதவாறு இறுக்கமாக மூடிவிடுங்கள். பின்னர், யூஸர் மேனுவலில் கொடுத்திருக்கும் வழிமுறைகள் படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தரம் கொண்ட ஆயிலை ஊற்றுங்கள். ஆயில் ஊற்றுவதற்கான மூடி சரி இல்லையென்றால் மாற்றிவிடுங்கள்.

    பின்னர், எஞ்சினை ஸ்டார்ட் செய்து ஒரு சில நிமிடங்கள் ஓடவிட்டு, டிரைன் நெட், ஆயில் ஃபில்டர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை பாருங்கள். பின்னர், எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதையும்அளவுகோல் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
    Posted 31 May 2014, 19:09 by Mohankumar Gopalsamy
Showing posts 1 - 2 of 2. View more »


Comments